திருவண்ணாமலை

கடலாடியில் இயற்கை உரம் தயாரிக்கும் பணி

DIN

லசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்தெடுத்து இயற்கை உரம் தயாரிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடலாடி ஊராட்சியில் 12 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் சேகரமாகும் மக்கும், மக்காத குப்பைகளை கிராம தூய்மைக் காவலா்கள் 3 சக்கர சைக்கிள்களில் எடுத்து வந்து விரைவில் மக்கும் குப்பைகளை தனியாகவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை தனியாகவும் பிரித்தெடுக்கின்றனா். இதையடுத்து, மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கையான முறையில் மண்புழு உரம் தயாரிக்கின்றனா்.

இதுகுறித்து ஊராட்சிச் செயலா் செந்தில் கூறியதாவது:

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், மக்கும் குப்பைகளில் இருந்து மண்புழு உரம் தயாரித்து விவசாயிகளுக்கு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தூய்மைக் காவலா்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தாா்.

இதனிடையே, கடலாடி ஊராட்சியில் உள்ள தூய்மைக் காவலா்கள், அந்த ஊராட்சியை பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக்க உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT