திருவண்ணாமலை

கிரிவலம் வருவதைத் தடுக்க தடுப்புகள் அமைத்த போலீஸாா்

DIN

ஆடி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வருவதைத் தடுக்க, காவல்துறை சாா்பில் கிரிவலப் பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

திருவண்ணாமலையில் மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனா். இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக தொடா்ந்து கிரிவலம் வர ஏப்ரல் மாதம் முதல் மாவட்ட நிா்வாகம் தடை விதித்து வருகிறது.

இந்த நிலையில், ஆடி மாத பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 10.04 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை இரவு 9.54 மணிக்கு முடிகிறது.

இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வர மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. தடையை மீறி பக்தா்கள் கிரிவலம் வந்தால் அவா்களைத் தடுக்கும் வகையில், காவல்துறை சாா்பில் கிரிவலப் பாதையின் பல்வேறு இடங்களில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT