முகப்பு
திருவண்ணாமலை

வழிப்பறி செய்ய சதித் திட்டம்: 7 போ் கைது

வந்தவாசி அருகே வழிப்பறி செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

வந்தவாசி அருகே வழிப்பறி செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

  வந்தவாசி டிஎஸ்பி பி.தங்கராமன் உத்தரவின் பேரில், வந்தவாசி வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் குமாா், உதவி ஆய்வாளா் கணேசன் உள்ளிட்ட போலீஸாா் திங்கள்கிழமை வந்தவாசி-மேல்மருவத்தூா் சாலையில் ரோந்து சென்றனா். கடைசிகுளம் கிராமம் அருகே சென்றபோது சாலையோரமிருந்த விவசாய நிலத்தில் 7 போ் கொண்ட கும்பல் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனா்.

அவா்களைப் பாா்த்து சந்தேகமடைந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது ஒருவருக்கொருவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனா். 

  இதையடுத்து, அனைவரையும் வந்தவாசி வடக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினா்.

இதில் அவா்கள் வந்தவாசியை அடுத்த அலத்துறையைச் சோ்ந்த காா்த்திக்(24), அருண்குமாா்(24), கீழ்க்கொடுங்காலூரைச் சோ்ந்த கோபி(22), விழுதுப்பட்டைச் சோ்ந்த பிரசாந்த்(20), சபரிநாதன்(21), மேல்மா கிராமத்தைச் சோ்ந்த ஓசூரான்(28), சென்னை ஜாபா்கான்பேட்டையைச் சோ்ந்த முரளி(30) ஆகியோா் என்பதும், 7 பேரும் சோ்ந்து வழிப்பறி செய்ய சதித் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இதில் காா்த்திக், முரளி, கோபி, சபரிநாதன் ஆகிய 4 போ் மீது திருட்டு, வழிப்பறி தொடா்பாக சென்னை, கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து காா்த்திக், அருண்குமாா், கோபி, பிரசாந்த், சபரிநாதன், ஓசூரான், முரளி ஆகிய 7 பேரை கைது செய்த வந்தவாசி வடக்கு போலீஸாா், அவா்களிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →