FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஆப்கன் உடனான மோதல்! 331 தலிபான்கள் கொலை - பாக். அரசு அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் உடனான மோதலில் 331 தலிபான்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு...

Updated On : 28 பிப்ரவரி 2026, 1:56 pm IST
- G.A. Marwat
பகிர்:

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் இதுவரை 331 தலிபான்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக “ஆபரேஷன் கஸாப் லில்-ஹா” எனும் பெயரில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது. இதற்கு, தலிபான்கள் பதில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 331 தலிபான் வீரர்கள் மற்றும் அவர்களது பயங்கரவாதக் கூட்டாளிகள் கொல்லப்பட்டதாகவும், 500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இத்துடன், ஆப்கானிஸ்தானின் 37 முக்கிய பகுதிகள் குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடைபெற்ற நிலையில், 163-க்கும் அதிகமான ராணுவத் தளவாடங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அரசு ஆதரவளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான், பலூச் விடுதலைப் படை, அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் அல்லது பாகிஸ்தானின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.

summary

Pakistan army says 331 Taliban and their allies have been killed in Afghanistan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments