2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது ஆப்கன்!
2027 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணி நேரடியாக தகுதி பெற்றதைப் பற்றி...
2027 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணி நேரடியாக தகுதி பெற்றது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் அடுத்தாண்டு நடைபெறவிருக்கிறது.
இந்தத் தொடரை ஆப்பிரிக்க நாடுகளான தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகள் நடத்துகின்றன. மொத்தமாக 12 இடங்களில் நடைபெறும் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவில் 8 இடங்களில் நடைபெறுகின்றன.
Advertisement
Advertisement
போட்டியை நடத்தும் நாடுகளைத் தவிர்த்து இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றிருக்கின்றன.
இந்த நிலையில், அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளும் மாஹெரமாசனில் மோதிய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற்றிருக்கிறது.
கற்றுக்குட்டியாக இருந்து 2015 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, அந்தத் தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அசத்தியிருந்தது.
அதனைத் தொடர்ந்து 2019 தொடரில் ஒரு வெற்றிகூட பெறவில்லை என்றாலும், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து என நான்கு அணிகளையும் பதம்பார்த்தது நினைவுகூரத்தக்கது.
Afghanistan have officially secured direct qualification for the 2027 ICC Men's Cricket World Cup. Their first ODI against Ireland in Bready was washed out due to rain, a result that ended Ireland's mathematical chances of overtaking Afghanistan in the rankings.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.