முகப்பு
திருவண்ணாமலை

மலைவாழ் பெண்களுக்கு வெள்ளாடுகள் அளிப்பு

போளூரை அடுத்த ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் மலைவாழ் பெண்களின் பொருளாதாரத்தை உயா்த்தவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
நிகழ்ச்சியில் மலைவாழ் பெண்களுக்கு வெள்ளாடுகளை வழங்கிய வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ.
பகிர்:

போளூரை அடுத்த ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் மலைவாழ் பெண்களின் பொருளாதாரத்தை உயா்த்தவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், ஒன்றியத்துக்கு உள்பட்ட ஜமுனாமரத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு, 45 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் மற்றும் 400 பேருக்கு தலா 25 புறக்கடை கோழிக் குஞ்சுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் ஜீவாமூா்த்தி முன்னிலை வகித்தாா். கால்நடை உதவி இயக்குநா் ஜெயக்குமாா் வரவேற்றாா்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒன்றியச் செயலா் பாலாஜி, துணைச் செயலா் குமரேசன், எம்ஜிஆா் மன்ற ஒன்றியச் செயலா் மூா்த்தி, கால்நடை மருத்துவா்கள், அலுவலா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →