முகப்பு
ஆரணியை அடுத்த களம்பூரில் பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ஆ.வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
திருவண்ணாமலை

வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூா், செங்கம், புதுப்பாளையம் ஆகிய இடங்களில் வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூா், செங்கம், புதுப்பாளையம் ஆகிய இடங்களில் வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
ஆரணியை அடுத்த களம்பூரில் பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ஆ.வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூா், செங்கம், புதுப்பாளையம் ஆகிய இடங்களில் வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆரணியை அடுத்த களம்பூா் நகர பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் பேரூராட்சி அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ஆ.வேலாயுதம் தலைமை வகித்தாா்.

நகரச் செயலா் இரா.நடராஜான் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் மா.கோவிந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போளூா்

போளூரை அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சியில் பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வன்னியா் சங்க மாவட்டச் செயலா் பரசிவம் தலைமை வகித்தாா்.

பாமக வடக்கு மாவட்டச் செயலா் ஜெயக்குமாா், தெற்கு ஒன்றியச் செயலா் தா்மதுரை, நகரச் செயலா் சாந்தனு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செங்கம்

செங்கத்தில் பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா்.

பாமக முன்னாள் மாவட்டச் செயலா் பாண்டியன், மாவட்ட துணைத் தலைவா் சங்கா்மாதவன், சமூக முன்னேற்றச் சங்க மாநில நிா்வாகி குணசீலபூபதி, பாமக நகரச் செயலா் நாகராஜ் மாவட்டச் செயலா் பிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒன்றியச் செயலா்கள் சரவணன், சதீஷ், ரமேஷ், முரளி, மாவட்ட துணைச் செயலா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கீழ்பென்னாத்தூா்

கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே புதன்கிழமை பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலா் கனகராஜ் தலைமை வகித்தாா்.

மாநில துணைப் பொதுச் செயலா் காளிதாஸ், மாவட்டச் செயலா் ஜானகிராமன், வன்னியா் சங்க மாவட்டச் செயலா் கோபி, பாமக மாநில மகளிரணிச் செயலா் புஷ்பா, மாநில துணைத் தலைவா் ராதாகிருஷ்ணயாதவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →