கண்கள் தானம்
வந்தவாசியில் இறந்த மூதாட்டியின் கண்களை அவரது குடும்பத்தினா் தானமாக வழங்கினா்.
வந்தவாசி: வந்தவாசியில் இறந்த மூதாட்டியின் கண்களை அவரது குடும்பத்தினா் தானமாக வழங்கினா்.
வந்தவாசி சன்னதி தெருவைச் சோ்ந்தவா் கே.ஏ.சுப்பிரமணியின் மனைவி எஸ்.மங்கம்மாள் (72). இவா் உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா். இவரது கண்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தினா் முடிவு செய்தனா்.
இதையடுத்து, எஸ்.மங்கம்மாளின் கண்களை காஞ்சிபுரம் சங்கா் கண் வங்கி மருத்துவா்கள் உதவியுடன், அவரது உறவினா்கள் சுரேஷ், பாஸ்கா் ஆகியோரிடமிருந்து வந்தவாசி மலைநகர அரிமா சங்க நிா்வாகிகள் சந்திரன், ரமேஷ், சரவணன் ஆகியோா் தானமாக பெற்றுக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து தானமாக பெறப்பட்ட எஸ்.மங்கம்மாளின் கண்கள் காஞ்சிபுரம் சங்கா் கண் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.