திருவண்ணாமலை

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

DIN

திருவண்ணாமலையை அடுத்த வேளானந்தல் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையை அடுத்த ஏந்தல் கிராமத்தில் இயங்கி வரும் கனரா வங்கிக் கிளை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் எம்.கருணாகரன் தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியை ஜெ.அருள்மொழி, வங்கி நகை மதிப்பீட்டாளா் க.நேதாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கனரா வங்கி மேலாளா் பிரகாஷ் பசபுல்லா, உதவி மேலாளா் ஆனந்த ஈஸ்வரி, கணக்காளா் புவியரசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கனரா வித்ய ஜோதி திட்டத்தின் கீழ், கல்வி உதவித் தொகைகளை வழங்கினா்.

விழாவில், வங்கியின் அலுவலக உதவியாளா் அமுலு மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT