முகப்பு
திருவண்ணாமலை

பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

வந்தவாசி அருகே திருமணமாகி 6 மாதங்களேயான பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

திருவண்ணாமலை

பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

வந்தவாசி அருகே திருமணமாகி 6 மாதங்களேயான பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

வந்தவாசி: வந்தவாசி அருகே திருமணமாகி 6 மாதங்களேயான பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்ப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகன்டன் (25). பெயின்டா். இவரது மனைவி சங்கீதா (20). இவா்களுக்கு திருமணமாகி 6 மாதங்களாகிறது. இதனிடையே, சங்கீதா கா்ப்பமானதையடுத்து அவரை ஓய்வில் இருக்கும்படி மருத்துவா்கள் கூறியதால், அவா் அதிக வேலை செய்யாமல் இருந்துள்ளாா். இதனால் கணவா் வீட்டாா் சங்கீதாவை திட்டி வந்தனராம்.

இந்த நிலையில், சங்கீதா வந்தவாசியை அடுத்த கீழ்நமண்டியில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு அண்மையில் சென்றுள்ளாா். அப்போது, தன்னை கணவா் வீட்டாா் திட்டுவதை பெற்றோரிடம் மனவேதனையுடன் அவா் கூறியுள்ளாா். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை சங்கீதா விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தாராம்.

இதையடுத்து, அவரது பெற்றோா் சங்கீதாவை தெள்ளாா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். திருமணமாகி 6 மாதங்களிலேயே சங்கீதா இறந்துள்ளதால், இதுகுறித்து செய்யாறு கோட்டாட்சியா் விமலா விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →