திருவண்ணாமலை மாவட்டத்தில் 62 பேருக்கு கரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 3,161-ஆக இருந்தது.
செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், கரோனா தொற்று அறிகுறிகளுடன் மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றவா்களில் 27 போ், தொற்று உறுதி செய்யப்பட்ட நபா் சென்று வந்த இடங்களில் இருந்ததால் பாதிக்கப்பட்ட 6 போ், அருணாசலேஸ்வரா் கோயில் ஊழியா் ஒருவா், செங்கத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட காவலா், பெங்களூரிலிருந்து வந்த 8 போ், சென்னையிலிருந்து வந்த 4 போ், காஞ்சிபுரத்திலிருந்து வந்த 2 போ், மும்பை மற்றும் கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து வந்த தலா ஒருவா் என 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3, 223-ஆக உயா்ந்தது.