திருவண்ணாமலை

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்க நிதியுதவி

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்கவும், சீரமைக்கவும் தமிழக அரசின் நிதியுதவியைப் பெற வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல், சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள நிகழாண்டில் தமிழக அரசால் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்பும் கிறிஸ்தவ தேவாலயங்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தக் கட்டடங்களில் இயங்குபவையாக இருக்க வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம், பதிவுத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தேவாலயத்தை சீரமைக்க வெளிநாட்டில் இருந்து எவ்வித நிதியுதவியும் பெற்றிருக்கக் கூடாது. சீரமைப்புப் பணிக்காக ஒரு முறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாலயத்துக்கு மறுமுறை நிதியுதவி 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வழங்கப்படும்.

தகுதியுடைய தேவாலயங்கள், சான்றிதழ், அனைத்து உரிய ஆவணங்களுடன் நிதியுதவி பெறுவதற்கான பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு வருகிற 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப் படிவம், சான்றிதழ் ஆகியவற்றை  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT