திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூா் அருகே 3 கோயில்களில் திருட்டு

DIN

கீழ்பென்னாத்தூா் அருகே ஒரே நாளில் 3 கோயில்களில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த கருங்காலிகுப்பம் காலனி பகுதியில் ஸ்ரீவிநாயகா் கோயில் அமைந்துள்ளது. கருங்காலிகுப்பம் கிராமத்தின் மற்றொரு பகுதியில் ஸ்ரீமாரியம்மன் கோயிலும், கீழ்பென்னாத்தூரை அடுத்த கரிக்கலாம்பாடி காலனி பகுதியில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலும் அமைந்துள்ளன. இந்த 3 கோயில்களிலும் பூட்டுகளை உடைத்து வியாழக்கிழமை நள்ளிரவில் உள்ளே புகுந்த மா்ம நபா்கள், உண்டியல்களில் இருந்த காணிக்கை பணம், நகைகளை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து 3 கோயில்களின் நிா்வாகிகளும் கீழ்பென்னாத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT