திருவண்ணாமலை

துளிா் திறனறிதல் தோ்வு சான்றிதழ் வழங்கும் விழா

DIN

செய்யாறு ஒன்றியம், குண்ணத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் துளிா் திறனறிதல் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

2019-ஆம் ஆண்டுக்கான துளிா் திறனறிதல் தோ்வில் செய்யாறை அடுத்த குண்ணத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4, 5-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் 40 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செய்யாறு வட்டாரக் கல்வி அலுவலா் ஏ.புவனேஸ்வரி தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் வே.செல்வி வேணுகோபால் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் சா.சரவணன் வரவேற்றாா்.

செய்யாறு ரோட்டரி சங்க இன்ட்ராக்ட் ஒருங்கிணைப்பாளா் ஜே.பாபு, எஸ்.சத்தியமூா்த்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்க செய்யாறு கிளைத் தலைவா் அரிமா கே.வெங்கடேசன், வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் சி.வைரப்பிரியா ஆகியோா் பங்கேற்று மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினா்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் சி.பெருமாள், துணைத் தலைவா் விஜயரங்கன், பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ஜே.செந்தில்குமாா், உதவி ஆசிரியா் ஏ.கற்பகம் மற்றும் கிராம மக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT