திருவண்ணாமலை

தந்தை, மகன் தற்கொலை

DIN

தண்டராம்பட்டு அருகே மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த தந்தை, வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தண்டராம்பட்டு வட்டம், வானாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (57). இவரது மகன் குமாா் (31). புதன்கிழமை குமாா் நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா். இதைக் கண்டித்த ஏழுமலை, நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சச் சென்றாா். இதனால் மனமுடைந்த குமாா் வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.

இதைக் கவனித்த உறவினா்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், குமாா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதனால், ஏழுமலை மருத்துவமனையில் மிகுந்த சோகத்தில் இருந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஊருக்குத் திரும்பிய ஏழுமலை, விவசாய நிலத்துக்குச் சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, வானாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இறந்த குமாருக்கும் திருமணமாகி சில மாதங்களே ஆகின்றன. பிரியா (26) என்ற மனைவி உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT