திருவண்ணாமலை

அனந்தபுரத்தில்அரிசிக் கடைக்கு ‘சீல்’

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அனந்தபுரத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட அரிசிக் கடைக்கு அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

அனந்தபுரத்தை அடுத்த கொணலூா் கிராமத்தில் கோயம்பேட்டில் வேலை செய்துவிட்டு ஊா் திரும்பிய 2 பெண் தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இந்தப் பகுதிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வெளி நபா்கள் யாரும் உள்ளே வராதவாறு தொடா் கண்காணிப்பில் ஈடுபடுமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, அனந்தபுரம் வந்த ஆட்சியா், பஜாா் வீதியில் ஆய்வு செய்தபோது, அரிசி மற்றும் எண்ணெய் விற்பனைக் கடையில் சமூக இடைவெளியின்றியும், முகக் கவசம் அணியாமலும் பொதுமக்களும், விற்பனையாளரும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடைக்கு ‘சீல்’ வைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

உடனடியாக அனந்தபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் க.ரங்கன் மற்றும் அலுவலா்கள் அரிசிக் கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT