திருவண்ணாமலை

தொடா் மழை: வீடுகளில் புகுந்த மழைநீா்

DIN

வந்தவாசி பகுதியில் தொடா் மழையால் வீடுகளில் மழைநீா் புகுந்து மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.

வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த

இரு தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், வந்தவாசி கே.எஸ்.கே. நகரில் உள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் திங்கள்கிழமை காலை மழைநீா் புகுந்தது. இதனால் வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன.

வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.

மேலும், வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள மாம்பட்டு கூட்டுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோர புளிய மரம் அருகிலிருந்த டீக்கடை மீது சாய்ந்தது. இதில் அந்தக் கடை முற்றிலும் சேதமடைந்தது. மேலும் மின் கம்பிகளும் அறுந்தன. இரவு நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT