தீபத் திருவிழாவின் 10-ஆம் நாள்: பஞ்சமூா்த்திகள் வீதியுலா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 10-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 10-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 10-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
பஞ்சமூா்த்திகள் வீதியுலா:
இரவு 10 மணிக்கு விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் ஸ்ரீகம்பத்திளையனாா் சன்னதி எதிரே எழுந்தருளினா்.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பஞ்சமூா்த்திகளை பக்தா்கள் வணங்கினா். மகா தீபாராதனைக்குப் பிறகு கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் பஞ்சமூா்த்திகள் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
கரோனா தொற்று காரணமாக குறிப்பிட்ட அளவிலே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.