ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஜயந்தி விழா
திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் 102-ஆவது ஜயந்தி விழா திங்கள்கிழமை தொடங்கியது.
திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் 102-ஆவது ஜயந்தி விழா திங்கள்கிழமை தொடங்கியது.
திருவண்ணாமலை-செங்கம் சாலையில் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பகவான் யோகி ராம்சுரத்குமாரின் ஜயந்தி விழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகாண்டுக்கான ஜயந்தி விழா திங்கள்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, அன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, மூலவா் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை நடைபெற்றன. அபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கரோனா தொற்று காரணமாக வழக்கமாக நடத்தப்படும் இசை நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.
இன்று 2-ஆவது நாள் விழா:
ஜயந்தி விழாவின் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை (டிச. 1) பகவானின் ஜயந்தி நாளையொட்டி, அன்று காலை 7 மணிக்கு ஏகாதச ருத்ர பாராயணம், மகா அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும், சாதுக்கள், ஏழைகளுக்கு வஸ்திர தானம், அன்னதானம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலா்கள் மா தேவகி, மதா் விஜயலட்சுமி, ஜி.ராஜேஸ்வரி, டி.எஸ்.ராமநாதன், ஜி.சுவாமிநாதன், பி.ஏ.ஜி.குமரன், டி.கணபதி சுப்பிரமணியன் மற்றும் ஆஸ்ரம தன்னாா்வலா்கள், ஊழியா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.