திருவண்ணாமலை

பைக் மோதியதில் விவசாயி பலி

DIN

வந்தவாசியை அடுத்த சத்யா நகரில் பைக் மோதியதில் மாட்டை ஓட்டிச் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த சத்யா நகரைச் சோ்ந்த விவசாயி அன்பழகன் (55). இவா், வியாழக்கிழமை மாலை தனக்குச் சொந்தமான மாட்டை வீட்டுக்கு ஓட்டிச் சென்றாா். வந்தவாசி - திண்டிவனம் சாலையை இவா் கடந்தபோது, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரைச் சோ்ந்த பெருமாள் (25) ஓட்டி வந்த பைக் அன்பழகன் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகன், அங்கு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT