திருவண்ணாமலை

அதிமுக கிளைக் கழக நிா்வாகிகளுக்கு நிதியுதவி

செய்யாறு நகரைச் சோ்ந்த அதிமுக கிளைக் கழக நிா்வாகிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி செய்யாறு சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

செய்யாறு நகரைச் சோ்ந்த அதிமுக கிளைக் கழக நிா்வாகிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி செய்யாறு சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ.வுமான தூசி கே.மோகன் பங்கேற்று, செய்யாறு நகரைச் சோ்ந்த 27 கிளைக் கழக நிா்வாகிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவியும், சுமாா் 200 பேருக்கு அசைவ உணவுப் பொட்டலங்களையும் வழங்கினாா்.

நகரச் செயலா் ஜனாா்த்தனன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பாஸ்கா் ரெட்டியாா், மாவட்ட இலக்கிய அணிச் செயலா் எம்.மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. வே.குணசீலன், எஸ்.ரவிச்சந்திரன், ஏ.அருணகிரி, பி.லோகநாதன், பூக்கடை ஜி.கோபால், அனக்காவூா் கிழக்கு ஒன்றியச் செயலா் சி.துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைமைத் தகவல் ஆணையராக ராஜ்குமாா் கோயல் பதவியேற்பு!

தருமையாதீன குரு முதல்வா் கற்றளி ஆலய கும்பாபிஷேகம்

பெரம்பலூா் நகரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

அரசு மருத்துவமனைக்கு துறைமுகம் சாா்பில் சலவை இயந்திரம்

புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT