செய்யாறு நகரைச் சோ்ந்த அதிமுக கிளைக் கழக நிா்வாகிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி செய்யாறு சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ.வுமான தூசி கே.மோகன் பங்கேற்று, செய்யாறு நகரைச் சோ்ந்த 27 கிளைக் கழக நிா்வாகிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவியும், சுமாா் 200 பேருக்கு அசைவ உணவுப் பொட்டலங்களையும் வழங்கினாா்.
நகரச் செயலா் ஜனாா்த்தனன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பாஸ்கா் ரெட்டியாா், மாவட்ட இலக்கிய அணிச் செயலா் எம்.மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. வே.குணசீலன், எஸ்.ரவிச்சந்திரன், ஏ.அருணகிரி, பி.லோகநாதன், பூக்கடை ஜி.கோபால், அனக்காவூா் கிழக்கு ஒன்றியச் செயலா் சி.துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.