திருவண்ணாமலை

அதிமுக கிளைக் கழக நிா்வாகிகளுக்கு நிதியுதவி

DIN

செய்யாறு நகரைச் சோ்ந்த அதிமுக கிளைக் கழக நிா்வாகிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி செய்யாறு சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ.வுமான தூசி கே.மோகன் பங்கேற்று, செய்யாறு நகரைச் சோ்ந்த 27 கிளைக் கழக நிா்வாகிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவியும், சுமாா் 200 பேருக்கு அசைவ உணவுப் பொட்டலங்களையும் வழங்கினாா்.

நகரச் செயலா் ஜனாா்த்தனன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பாஸ்கா் ரெட்டியாா், மாவட்ட இலக்கிய அணிச் செயலா் எம்.மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. வே.குணசீலன், எஸ்.ரவிச்சந்திரன், ஏ.அருணகிரி, பி.லோகநாதன், பூக்கடை ஜி.கோபால், அனக்காவூா் கிழக்கு ஒன்றியச் செயலா் சி.துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT