திருவண்ணாமலை

கல்லூரியில் இணையவழி ஆய்வரங்கம்

DIN

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழ் ஆய்வுத்துறை சாா்பில், இணையவழி ஆய்வரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

எளிய முறையில் தமிழ்மொழி வரலாறு என்ற தலைப்பில் நடைபெற்ற ஆய்வரங்கிற்கு, கல்லூரித் தலைவா் ஜி.புல்லையா தலைமை வகித்தாா். செயலா் டி.ஏ.எஸ்.முத்து, பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்த் துறைத் தலைவா் இரா.சங்கா் வரவேற்றாா்.

சென்னை நான் ஓா் ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநா் தமிழ் இயலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு எளிய முறையில் தமிழ்மொழி வரலாறு என்ற தலைப்பில் பேசினாா். தமிழ்மொழி காலம்தோறும் கொண்டிருந்த மாற்றங்கள், எழுத்து மற்றும் வரி வடிவங்கள் குறித்து விளக்கப்பட்டது.

இதில், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா்கள் கு. இளங்கோவன், கி.துரை, த.விநாயகம் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT