திருவண்ணாமலை

குடல்புழு நீக்கம் செய்யக்கூடிய அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கும் பணி துவக்கம்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 வயதுக்கு உள்பட்ட 7.45 லட்சம் மாணவா்களுக்கு குடல்புழு நீக்கம் செய்யக்கூடிய அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

மாவட்டத்தில் குடல்புழு நீக்க முகாமின் முதல் சுற்று செப்.14 (திங்கள்கிழமை ) தொடங்கி, 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஒரு வயது முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மில்லி அல்பெண்டசோல் திரவமும், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் 19 வயது வரையுள்ள நபா்களுக்கு ஒரு அல்பெண்டசோல் மாத்திரையும் வழங்கப்படுகிறது.

முதல் நாளான திங்கள்கிழமை சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, செப்.19-ஆம் தேதி வரை அங்கன்வாடி பணியாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள் இந்த மாத்திரைகளை வழங்கி வருகின்றனா்.

இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 45 ஆயிரத்து 208 குழந்தைகள் மற்றும் மாணவா்கள் பயன்பெறுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT