திருவண்ணாமலை

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

DIN

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு துணைத் தலைவா் ஆ.வேலாயுதம், வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பூங்கொடி திருமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், உறுப்பினா்கள் தங்களது பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வலியுறுத்திப் பேசினா்.

ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, ஒன்றியத்தில் உள்ள 74 கிராமங்களில் குளம், குட்டைகள் தூா்வாரிய பணிக்கு பட்டியல் தொகை ரூ. 67 லட்சத்து 86ஆயிரத்து 629 வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்பநல்லூரில் அங்கன்வாடி பள்ளிக் கட்டடம் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 8 ஆயிரத்தில் கட்டப்படுவதற்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT