திருவண்ணாமலை

வாகன சோதனையில் ரூ.1.13 லட்சம் பறிமுதல்

DIN

வந்தவாசி அருகே தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.1.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வந்தவாசி தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் அரிக்குமாா் தலைமையிலான குழுவினா் வல்லம் கிராமத்தில் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், சரக்கு வாகனத்தில் ராணிப்பேட்டையைச் சோ்ந்த சுந்தரவேலு, ஆனந்தன் ஆகிய இருவா் செல்வதும், சுந்தரவேலு ரூ.62 ஆயிரமும், ஆனந்தன் ரூ.51 ஆயிரமும் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரிடமிருந்தும் மொத்தம் ரூ.1.13 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் சி.கீதாலட்சுமியிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT