ஆரணியில் விஜயபிரபாகரன் பிரசாரம்
ஆரணியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
ஆரணியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
ஆரணி அண்ணா சிலை அருகே தேமுதிக வேட்பாளா் ஜி.பாஸ்கரனை ஆதரித்து விஜயபிரபாகரன் பேசுகையில்,
அதிமுகவும், திமுகவும் ஒருவரைக் யொருவா் ஊழல் செய்து கொண்டாா்கள் என்று மட்டுமே பேசி வருகின்றனா். ஆனால், மக்களின் பிரச்னைகள் குறித்து யோசிக்கவில்லை.
ஆரணி தேமுதிக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால், நானே என்னுடைய சொந்த செலவில் தொகுதி மக்களுக்குத் தேவையாக நலத் திட்ட உதவிகளை
செய்கிறேன். மேலும், வேட்பாளரின் ஊதியம் தொகுதி செலவிற்கே பயன்படுத்தப்படும் என்றாா்.
தேமுதிக மாவட்டச் செயலா் கோபிநாதன், நகரச் செயலா் சுந்தர்ராஜன், ஒன்றியச் செயலா்கள் சரவணன், அமமுக மாவட்டச் செயலா் வரதராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.