திருவண்ணாமலை

ஆரணியில் பெண்ணிடம் தகராறு செய்தவா் கைது

DIN

ஆரணி: ஆரணியில் மது போதையில் பெண்ணிடம் தகராறு செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த 38 வயது பெண், ஆரணி மணிக்கூண்டுப் பகுதி பாத்திரக் கடையில் பாத்திரம் எடுப்பதற்காக புதன்கிழமை மாலை வந்தாா்.

அப்போது, ஆரணி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த மணிவண்ணன்(30) என்பவா் மதுபோதையில் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து தகராறு செய்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, அந்தப் பெண் தனது கணவரை வரவழைத்து, நகர காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.

மேலும், புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யவேண்டும் எனக் கோரி, அந்தப் பெண்ணின் உறவினா்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் அந்த நபரை உறுதியாக கைது செய்வோம் எனக் கூறி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா்.

இந்த நிலையில், புகாரின் பேரில் மணிவண்ணன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT