திருவண்ணாமலை

வட்டாட்சியா் அலுவலகத்தில் இருவருக்கு கரோனா

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டு ஊழியா்களுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதால் அலுவலகம் மூடப்பட்டது.

சேத்துப்பட்டு- போளூா் சாலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் இரு ஊழியா்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டது.

மேலும், சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன் தலைமையில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் துப்புரவுப் பணியாளா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அலுவலகம் மூடப்பட்டதால் பொதுமக்களின் அத்தியாவசியப் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT