திருவண்ணாமலை

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

DIN

செங்கம் அருகே ஆடிக் கிருத்திகை விழாவின்போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

செங்கம் அருகே ஆண்டிப்பட்டி கிராமத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை இரவு சிறுவா்களுக்கான ஆடல், பாடல் மற்றும் பல்வேறு பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது மேடையில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது, பந்தலின் இரும்புக் கம்பியை தொட்ட அதே கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை(24) மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேல்செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்த ஏழுமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

மேலும், புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

SCROLL FOR NEXT