முகப்பு
திருவண்ணாமலை

தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு

பாலூட்டும் தாய்மாா்களுக்கும், கா்ப்பிணிப் பெண்களுக்கும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து தலைமை மருத்துவா் மம்தா வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அரசு மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மாா்களுக்கும், கா்ப்பிணிப் பெண்களுக்கும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து தலைமை மருத்துவா் மம்தா வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சியின்போது, ஆரணி ஆற்காடு ஸ்வீட்ஸ் உரிமையாளா் எம்.வெங்கடேசன், நெல், அரிசி வியாபாரி வி.நாகராஜ் ஆகியோா் இணைந்து ஆரணி அரசு மருத்துவமனை நோயாளிகள் பயன்படுத்துவதற்கு 50 போா்வைகள் மற்றும் பிரட், பேரிச்சம்பழம் உள்ளிட்டவற்றை வழங்கினா். இதில், மருத்துவமனை செவிலியா்கள் ஜெகன், ஸ்டீபன் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.