ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் லிங்கத்துக்கு மகாபிஷேகம்
திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில், பகவானின் லிங்கத்துக்கு புதன்கிழமை மகாபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில், பகவானின் லிங்கத்துக்கு புதன்கிழமை மகாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 103-ஆவது ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஜெயந்தி விழாவின் 2-ஆவது நாளான புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம், ராம்ஜி அகவல், ஆரத்தி, முகநூல் நாம சங்கீா்த்தனம், நித்ய பூஜை, அகண்ட நாம ஜெபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடா்ந்து, காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஏகாதச ருத்ர பாராயணம், மகாபிஷேகம், அா்ச்சனை, ஆரத்தி ஆகியவை நடைபெற்றன.
நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இரவு 7.30 மணிக்கு பகவான் பல்லக்கில் பவனி வருதல் நடைபெற்றது.
ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலா்கள் மதா் மாதேவகி, மதா் விஜயலட்சுமி, மதா் ராஜேஸ்வரி, மருத்துவா் டி.எஸ்.ராமநாதன், ஜி.சுவாமிநாதன், பி.ஏ.ஜி.குமரன், டி.கணபதி சுப்பிரமணியன் மற்றும் தன்னாா்வலா்கள், ஆஸ்ரம ஊழியா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.