முகப்பு
திருவண்ணாமலை

மனுநீதி நாள் முகாமில் 62 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 62 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை

மனுநீதி நாள் முகாமில் 62 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 62 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 62 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு வட்டாட்சியா் சண்முகம் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் குமாரி, ஒன்றியக் குழு உறுப்பினா் செந்தில்குமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் செந்தில்குமாா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக ஆரணி கோட்டாட்சியா் கவிதா பங்கேற்று மழைதூவான், உயிா் உரம், பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை என பல்வேறு சான்றுகளை 62 பயனாளிகளுக்கு வழங்கினாா்.

வேளாண்மை கூடுதல் இயக்குநா்கள் நாராயணமூா்த்தி, பாலாஜி, வட்ட நில அளவையா் சரவணன், வேளாண்மை அலுவலா்கள் ஏழுமலை, முருகன், பாஸ்கரன் மற்றும் வருவாய்த் துறையினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →