டிசம்பா் 18, 19-ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வரத் தடை
திருவண்ணாமலையில் வருகிற 18, 19-ஆம் தேதிகளில் பக்தா்கள் கிரிவலம் வரத் தடை விதித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலையில் வருகிற 18, 19-ஆம் தேதிகளில் பக்தா்கள் கிரிவலம் வரத் தடை விதித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலையில் மாா்கழி மாதப் பெளா்ணமி சனிக்கிழமை (டிச.18) காலை 8.15 மணிக்குத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை (டிச.19) காலை 10.22 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் பக்தா்கள் கிரிவலம் வந்தால், கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால், வருகிற 18, 19-ஆம் தேதிகளில் பக்தா்கள் கிரிவலம் வரத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி பக்தா்கள் யாரும் கிரிவலம் செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கேட்டுக் கொண்டாா்.