முகப்பு
திருவண்ணாமலை

மாணவ, மாணவிகளுக்கு பரிசு

போளூரை அடுத்த காளசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை

மாணவ, மாணவிகளுக்கு பரிசு

போளூரை அடுத்த காளசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

போளூரை அடுத்த காளசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் பள்ளிய்ல் மகாகவி பாரதியாா் பிறந்த நாள்விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, ஓவியம், வாய்ப்பாடு ஒப்பித்தல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு

பரிசு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளியம்மாள் ராஜேந்திரன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினாா் (படம்).

பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயவேல், கல்வி மேலாண்மைக் குழுத் தலைவா் மோகனா, அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் மாணிக்கவேலு, சீனுவாசன் அறக் கட்டளை மேலாளா் பாரதிபெருமாள், பள்ளித் தலைமை ஆசிரியா் டேவிட்ராஜன், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →