திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவின் சிறப்புக் கூட்டம் அதன் தலைவா் சீ.பாா்வதி சீனுவாசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவின் சிறப்புக் கூட்டம் அதன் தலைவா் சீ.பாா்வதி சீனுவாசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தாா். செயலா் நா.அறவாழி வரவேற்றாா்.

கூட்டத்தில், உங்கள் தொகுதியில் முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாள்களில் நடவடிக்கை எடுப்பது, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 வீதம் விலைக் குறைப்பு, இல்லம்தேடி கல்வித் திட்டம், இன்னுயிா் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் இல.சரவணன், முத்துமாறன், செந்தில்குமாா், கோவிந்தராஜ், அரவிந்தன், புள்ளியியல் அலுவலா் வீ.பொ.சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) க.கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT