சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிப்பு
போளூரில் சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
திருவண்ணாமலைசாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிப்பு
போளூரில் சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
போளூரில் சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
நகரில் அண்ணா சாலை, பழைய பஜாா், சிந்தாதரிப்பேட்டை, ஜமுனாமரத்தூா் சாலை, ரயில்வே சாலை போன்றவற்றில் ஜவுளிக் கடைகள், மின் சாதனப் பொருள் கடைகள், நகைக் கடைகள் அமைந்துள்ளன.
சிந்தாதரிப்பேட்டையில் அதிகளவில் ஜவுளி, நகைக் கடைகள் அமைந்துள்ளன. கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிடுகின்றனா்.
மேலும், ஜமுனாமரத்தூா் செல்லும் வாகனங்கள் இவ்வழியாகத்தான் செல்கின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்லும்போதும், எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிடும்போதும் விபத்துகள் நேரிடுகின்றன.
போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
மேலும், சிந்தாதரிப்பேட்டை பகுதியில் போக்குவரத்து காவலா்களை நிறுத்தி வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனா்.