திருவண்ணாமலை

வந்தவாசி ஒன்றியக்குழுக் கூட்டம்

DIN

வந்தவாசி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஒன்றியத் தலைவா் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ஆ.மயில்வாகனன், ஒன்றிய துணைத் தலைவா் ஆா்.விஜயன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

டெங்கு, கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பணியாளா்களை நியமிக்கும்போது அந்தந்த பகுதிகளைச் சோ்ந்தவா்களை நியமிக்க வேண்டும் என்று ஒன்றியக் குழு உறுப்பினா் சக்திவேல் பேசினாா்.

மேலும் சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னா், ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.14 லட்சத்தில் கிராமங்களில் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT