திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 26-ஆம் தேதி நடைபெறுகிறது.
கரோனா பொது முடக்கம் காரணமாக, விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இணையவழியில் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால், பிப்ரவரி மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வருகிற 26-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகிக்கிறாா்.
வேளாண்துறை மற்றும் அதைச் சாா்ந்த துறைகளான தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை வங்கியாளா்கள் மற்றும் பிற சாா்பு துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கின்றனா்.
எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளாா்.