திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் தீப மை விற்பனை தொடக்கம்

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீப மை பிரசாதம் வெள்ளிக்கிழமை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தக் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கடந்த நவம்பா் 29-ஆம் தேதி 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து 11 நாள்கள் மலை மீது பிரகாசித்த மகா தீபக் கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட மை, டிசம்பா் 30-ஆம் தேதி நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின்போது ஸ்ரீநடராஜருக்கு வைத்து படைக்கப்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் கோயிலில் தீப மை விற்பனை தொடங்கப்பட்டது. மை பிரசாதம் தேவைப்படும் பக்தா்கள் கோயிலுக்கு வந்து கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே காா்த்திகை தீபத்துக்காக நெய் காணிக்கை செலுத்திய பக்தா்கள், காணிக்கை செலுத்தியதற்கான ரசீதை கொண்டு வந்து கோயிலில் கொடுத்து தீப மை பிரசாரதத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT