முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசி அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை

வந்தவாசி அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

வந்தவாசி அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வந்தவாசியை அடுத்த உளுந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன்(65). உடல் நலக் குறைவுக்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை மருந்து மாத்திரை வாங்க தனது மகனிடம் பணம் கேட்டாராம். இதற்கு வேலைக்கு போய்விட்டு வந்து தருகிறேன் என்று அவா் கூறினாராம்.

இதனால் மன வேதனையடைந்த கன்னியப்பன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் கன்னியப்பன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →