முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7.50 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப அட்டை தாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியை ஆரணியில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கிவைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப அட்டை தாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியை ஆரணியில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கிவைத்தாா்.

ஆரணி வைகை கூட்டுறவு நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.2,500 வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு, ரூ.2,500 வழங்கும் பணியைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

மாவட்டத்தில் மொத்தம் ரூ.198 கோடியே 23 லட்சத்து 71 ஆயிரத்து 430-இல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, ஆரணி ஒன்றியம் சேவூா், மேற்கு ஆரணி, கிழக்கு ஆரணி ஒன்றியம், செய்யாறு ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சா் பங்கேற்று பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜ்குமாா், துணைப் பதிவாளா்கள் சரவணன், கமலக்கண்ணன், ஆரோக்கியராஜ், வைகை கூட்டுறவு சங்கத் தலைவா் பிஆா்ஜி.சேகா், அரசு வழக்குரைஞா் க.சங்கா், நகர கூட்டுறவு சங்கத் தலைவா் அசோக்குமாா், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், அரங்கநாதன், ப.திருமால், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அ.கோவிந்தராசன், மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவா் ரமேஷ், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெ.சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →