கிராம உதவியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, வந்தவாசியில் கிராம உதவியாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வந்தவாசி: கோரிக்கைகளை வலியுறுத்தி, வந்தவாசியில் கிராம உதவியாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலா் எம்.பிரபாகரன் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலா்கள் நலச் சங்க மாவட்டச் செயலா் ஈ.தசரதன், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க நிா்வாகி வெங்கடேசன் உள்ளிட்டோா் பேசினா்.
கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும், காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கிராம உதவியாளா்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவா் ஆா்.ஆறுமுகம், மாவட்ட இணைச் செயலா் பி.புனிதா, வட்டத் தலைவா் ஜி.சுப்பிரமணி, வட்டச் செயலா் ஜெ.ஆதம், வட்ட பொருளா் எம்.கணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.