யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய குல்தீப் யாதவ் - தவிர்த்த மனைவி!
யோகி ஆதித்யநாத் காலில் விழுவதைத் தவிர்த்த குல்தீப் யாதவ் மனைவி!
லக்னௌ : உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குல்தீப் யாதவ் வாழ்த்து பெற்றார். அதேவேளையில், அவர் அருகிலிருந்த அவருடைய மனைவி, யோகி காலில் விழுவதைத் தவிர்த்ததையும் பார்க்க முடிந்தது. இந்தக் காணொலி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பாகப் பேசப்படுகிறது.
குல்தீப் யாதவுக்கும் அவரது சிறுவயது தோழி வன்ஷிகாவுக்கும் மார்ச் 14-இல் முசோரியில் திருமணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இன்று(மார்ச் 17) லக்னௌ நகரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த யோகி ஆதித்யநாத் அங்கு புதுமண தம்பதியை வாழ்த்தினார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த யோகி, காரை விட்டு கீழிறங்கி விழா மேடைக்கு நடந்து வருவதைக் கண்ட குல்தீப் உடனடியாக அவர் அருகே ஓடிச்சென்று காலில் விழுந்து வணங்கினார். அதன் தொடர்ச்சியாக, யோகி மற்றும் குல்தீப் அருகாமையில் நின்ற வன்ஷிகா இருகைகூப்பி உத்தரப் பிரதேச முதல்வருக்கு வணக்கம் தெரிவித்ததுடன் நிறுத்திக்கொண்டார்; கால்களில் விழவில்லை என்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது.
Advertisement
Advertisement
Kuldeep Yadav post-wedding reception ceremony Yogi Adityanath offered blessings to the newlyweds
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.