முகப்பு
இந்தியா

யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய குல்தீப் யாதவ் - தவிர்த்த மனைவி!

யோகி ஆதித்யநாத் காலில் விழுவதைத் தவிர்த்த குல்தீப் யாதவ் மனைவி!

Updated On : 17 மார்ச் 2026, 8:45 pm IST
குல்தீப் யாதவ் - வன்ஷிகா தம்பதிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து - @myogiadityanath
பகிர்:

லக்னௌ : உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குல்தீப் யாதவ் வாழ்த்து பெற்றார். அதேவேளையில், அவர் அருகிலிருந்த அவருடைய மனைவி, யோகி காலில் விழுவதைத் தவிர்த்ததையும் பார்க்க முடிந்தது. இந்தக் காணொலி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பாகப் பேசப்படுகிறது.

குல்தீப் யாதவுக்கும் அவரது சிறுவயது தோழி வன்ஷிகாவுக்கும் மார்ச் 14-இல் முசோரியில் திருமணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இன்று(மார்ச் 17) லக்னௌ நகரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த யோகி ஆதித்யநாத் அங்கு புதுமண தம்பதியை வாழ்த்தினார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த யோகி, காரை விட்டு கீழிறங்கி விழா மேடைக்கு நடந்து வருவதைக் கண்ட குல்தீப் உடனடியாக அவர் அருகே ஓடிச்சென்று காலில் விழுந்து வணங்கினார். அதன் தொடர்ச்சியாக, யோகி மற்றும் குல்தீப் அருகாமையில் நின்ற வன்ஷிகா இருகைகூப்பி உத்தரப் பிரதேச முதல்வருக்கு வணக்கம் தெரிவித்ததுடன் நிறுத்திக்கொண்டார்; கால்களில் விழவில்லை என்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Advertisement

summary

Kuldeep Yadav post-wedding reception ceremony Yogi Adityanath offered blessings to the newlyweds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.