முகப்பு
வணிகம்

வாராக்கடனை மீட்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி!

பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 450.85 கோடிக்கும் அதிகமான வாராக்கடனை விற்பனை செய்யவுள்ளது குறித்து....

Updated On : 17 மார்ச் 2026, 9:37 pm IST
பஞ்சாப் நேஷனல் வங்கி
பகிர்:

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 450.85 கோடிக்கும் அதிகமான வாராக்கடனை விற்பனை செய்வதன் மூலம், அதன் நிலுவையை வெகுவாக குறைப்பதற்கான ஒரு உறுதியான நிலைப்பாட்டைத் தொடங்கியுள்ளது.

அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி, ரோல்டா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரூ. 450.85 கோடி மதிப்புள்ள வாராக்கடனை விற்பனை செய்வதற்கான ஏலத்தினை இன்று தொடங்கியது.

இந்த சொத்து, ஹரியாணாவின் குருகிராமில் உள்ள சுமார் 7,800 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடமும் அதில் உள்ள கட்டடமும் அடங்கும். இந்தச் சொத்துக்கான குறைந்தபட்ச விலை ரூ. 250 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதே வேளையில், நவம்பர் 31, 2024 நிலவரப்படி மொத்த நிலுவைத் தொகை ரூ. 450.85 கோடியாக உள்ளது.

Advertisement

இதற்கிடையில், சொத்தை தன்வசப்படுத்திய பிறகு வங்கி, இ-ஏலம், மூலம் ஏப்ரல் 7, 2026 அன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இணையத்தில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சொத்தில் குருகிராம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ. 2.1 கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகையும் உள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

State-owned Punjab National Bank on Tuesday invited bids to sell assets worth Rs 450.85 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.