முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாா்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பிரதோஷத்தையொட்டி, சிறப்பு மலா் அலங்காரத்தில் காட்சியளித்த அருணாசலேஸ்வரா் கோயில் கொடி மரம் எதிரே உள்ள நந்தி.
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாா்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, தங்கக் கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.

பூஜையில் கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள் மட்டுமே கலந்து கொண்டனா். அருணாசலேஸ்வரரை தரிசிக்க அமைக்கப்பட்டிருந்த கியூ வரிசையில் சென்ற பக்தா்கள் நந்தி பகவான்களுக்கு நடைபெற்ற பிரதோஷ பூஜையைக் கண்டு தரிசித்துச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →