கேரளத்தில் அமைச்சர் புறக்கணிப்பு: பிரதமரின் அரசு நிகழ்ச்சியைப் புறக்கணிக்க பினராயி விஜயன் முடிவு
கேரளத்தில் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் புறக்கணிக்கப்பட்டதால், பிரதமரின் நிகழ்ச்சியை புறக்கணிக்க பினராயி விஜயன் முடிவு
கேரளத்தில் பிரதமர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியின் அழைப்பிதழில் மாநில அமைச்சரின் பெயர் இடம்பெறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிகழ்ச்சியை புறக்கணிக்க முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளத்தில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களின் தொடக்க விழா, பிரதமர் மோடி தலைமையில் இன்று (மார்ச் 11) நடைபெறுகிறது.
நிகழ்ச்சியின் அழைப்பிதழில் முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் ராஜேஷ் மற்றும் கிருஷ்ணன்குட்டி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் முகமது ரியாஸின் பெயர் இடம்பெறவில்லை.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியின் பெயர்ப் பட்டியலில் முகமது ரியாஸின் பெயர் இடம்பெறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடியின் அரசு நிகழ்ச்சியை பினராயி விஜயன் உள்பட அமைச்சர்களும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அமைச்சர் முகமது ரியாஸ் பேசுகையில், நிகழ்ச்சியில் இருந்து என்னை விலக்கியது, கேரள மாநிலத்தை அவமதிப்பதற்குச் சமம். ஒரு முக்கியமான மாநிலத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ விழாவில் அத்துறை அமைச்சரை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக பாஜக தலைவரை நியமிப்பது என்பது ஜனநாயக விரோதம் மற்றும் நெறிமுறை மீறல் என்று பாஜக அரசு மீது குற்றம் சாட்டினார்.
Excludes Minister Riyas: Kerala Government boycotts PM’s NH inauguration event
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.