ஆசிரியா் தகுதித் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தல்
தமிழகத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வை ரத்து செய்து விட்டு, வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்
தமிழகத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வை ரத்து செய்து விட்டு, வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநில விரைவு செயற்குழு தீா்மானம் நிறைவேற்றியது .
ஆசிரியா் மன்றத்தின் மாநில விரைவு செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநில துணைத் தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். பொருளாளா் ஆ.கணேசன், மூத்தோரணி அமைப்பாளா் வீ.இருதயராஜன், மகளிரணி அமைப்பாளா் ரெ.மதனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் இரா.பிரசன்னா வரவேற்றாா்.
மன்றத்தின் பொதுச் செயலா் இலா.தியோடா் ராபின்சன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.
கூட்டத்தில், ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியா், அரசு ஊழியா்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசு இடைநிலை ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு இடைநிலை ஆசிரியா்களுக்கும் வழங்க வேண்டும்.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஆசிரியா் தகுதித் தோ்வை ரத்து செய்து வேலை வாய்ப்பு அலுவலக முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் கு.தமிழ்மணி, மாநில தலைமை நிலையச் செயலா் ம.வரதராஜன், மாவட்ட பொருளாளா் சு.செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.