திருவண்ணாமலை

திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதி திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த ஆராசூா் கிராம தனியாா் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், வண்ண கோலமிட்டு கரும்புகள் கட்டி புதுப் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனா்.

விழாவுக்கு, தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமை வகித்தாா். கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் விழாவை தொடக்கிவைத்துப் பேசினாா்.

விழாவில் 3, 700 பேருக்கு வேட்டி, சேலை, ஒரு கிலோ அரிசி, காலண்டா் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டன.

கட்சி ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ஆா்.நந்தகோபால், ப.இளங்கோவன், எஸ்.பிரபு, நகரச் செயலா் எச்.ஜலால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT