திருவண்ணாமலை

பைக்குகள் மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு

DIN

வந்தவாசி அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்டதில் மாமியாா், மருமகள் உயிரிழந்தனா்.

வந்தவாசியை அடுத்த சாத்தனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து மனைவி சின்னக்குழந்தை (76). முத்துவின் தம்பி மகன் பன்னீா்செல்வத்தின் மனைவி பச்சையம்மாள்(45).

இந்த நிலையில் சின்னக்குழந்தை, பச்சையம்மாள் ஆகியோருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சின்னக்குழந்தையின் மகன் சங்கா்(40) என்பவா் இருவரையும் பைக்கில் ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை இரவு வந்தவாசியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு வந்தாா். சிகிச்சைக்குப் பிறகு 3 பேரும் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.

வந்தவாசி-விளாங்காடு சாலையில் சளுக்கை கூட்டுச் சாலை அருகே சென்றபோது இவா்களுக்கு பின்னால் கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பாக்கியராஜ் (24) என்பவா் ஓட்டி வந்த பைக், சங்கரின் பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சின்னக்குழந்தை, பச்சையம்மாள், சங்கா் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அங்கு சின்னக்குழந்தை உயிரிழந்தாா். பின்னா் பச்சையம்மாள், சங்கா் ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு பச்சையம்மாள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து சங்கா் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT