திருவண்ணாமலை

ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருவண்ணாமலையை அடுத்த மாயங்குளம் கிராமத்தில் ஸ்ரீவிக்னேஸ்வரா், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீநவகிரக, ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயணப் பெருமாள், ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அன்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை, தம்பதி பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, பூா்ணாஹூதி, கலச பூஜை, நாடி சந்தானம், யாக சாலை பூஜை, யாத்ராதானம், கோபுர கலச கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து, கோயில் கோபுர கலசத்தின் மீதும், மூலவா் மீதும் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பிறகு, மூலவா் சன்னதியில் மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT